சிறிலங்காவுக்கான இந்தியாவின் 1 பில்லியன் டாலர் கடனை நீட்டிக்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது
இந்த நிகழ்வில் பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் கலந்துகொண்டதாக அமைச்சர் சேமசிங்க டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான இந்தியாவிடமிருந்து 1000 மில்லியன் அமெரிக்க டொலர் உதவித் திட்டத்தை மேலும் ஒரு வருட காலத்திற்கு நீடிப்பதற்கான ஒப்பந்தம் நேற்று (மே 30) கைச்சாத்திடப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் கலந்துகொண்டதாக அமைச்சர் சேமசிங்க டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
ஆரம்ப ஒப்பந்தம் 2022 மார்ச்சில் கைச்சாத்திடப்பட்டது, ஒதுக்கப்பட்ட 1,000 மில்லியன் அமெரிக்க டாலர்களில் 576.75 மில்லியன் டாலர்களுக்கு பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இதன்படி, எஞ்சிய 423.25 மில்லியன் டொலர்களுக்கு ஒப்பந்தம் நீடிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 2024 மார்ச் வரை அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் நிதியமைச்சர் வலியுறுத்தினார்.