நிதித்துறையை வலுப்படுத்த உலக வங்கியிடமிருந்து 150 மில்லியன் டொலர்களைச் சிறிலங்கா பெறவுள்ளது
இலங்கை மத்திய வங்கியால் நிர்வகிக்கப்படும் இலங்கை வைப்புத்தொகை காப்புறுதித் திட்டத்தின்) நிதி மற்றும் நிறுவன திறன்களை உயர்த்துவதற்காக இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா நிதித் துறை பாதுகாப்பு வலை வலுப்படுத்தும் திட்டத்தின் கீழ் நிதியுதவியைப் பெறுவதற்கு உலக வங்கியுடன் தேவையான உடன்படிக்கைகளை மேற்கொள்ளும் முன்மொழிவுக்கு அமைச்சர்கள் அமைச்சரவை பச்சைக்கொடி காட்டியுள்ளது.
செவ்வாய்க்கிழமை (டிச.05) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது.
இலங்கை மத்திய வங்கியால் நிர்வகிக்கப்படும் இலங்கை வைப்புத்தொகை காப்புறுதித் திட்டத்தின்) நிதி மற்றும் நிறுவன திறன்களை உயர்த்துவதற்காக இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. வங்கிகள் மற்றும் உரிமம் பெற்ற நிதி நிறுவனங்களின் காப்புறுதி டெபாசிட்தாரர்களுக்கு பணம் செலுத்துவதற்குப் பயன்படுத்தக்கூடிய வைப்புத்தொகை காப்புறுதித் திட்டத்தின் இருப்புக்களை அதிகரிக்க இந்த நிதியுதவி உதவும்.
இணையாக, திறம்பட வைப்புத்தொகை காப்புறுதித் திட்டங்களுக்கான சர்வதேச நல்ல நடைமுறைகளுக்கு ஏற்ப வைப்புத்தொகை காப்புறுதித் திட்டத்தை நிறுவனரீதியாக வலுப்படுத்துவதற்கு இந்தத் திட்டம் துணைபுரியும்.