Breaking News
சிறிலங்காவின் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்திற்கு எதிராக வழக்கு தாக்கல்
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் முன்னாள் அழைப்பாளர் வசந்த முதலிகே இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
சிறிலங்காவின் பன்னாட்டு இறையாண்மைப் பத்திரங்களுடன் தொடர்புடைய கடனை மறுசீரமைப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானம் குடிமக்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக அறிவித்து உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் முன்னாள் அழைப்பாளர் வசந்த முதலிகே இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவில் பிரதிவாதிகளாக நிதியமைச்சர், நிதியமைச்சின் செயலாளர், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.