Breaking News
பாதுகாப்பு தளபதிகள் ஜனாதிபதி அநுரகுமாரவை சந்தித்தனர்
பாதுகாப்பு படைகளின் பிரதானிகள் நேற்று (04) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களை பாரம்பரிய மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
புதிய ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து பாதுகாப்பு படைகளின் பிரதானிகள் நேற்று (04) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களை பாரம்பரிய மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
அதன்படி, பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விகும் லியனகே, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோர் ஜனாதிபதியை சந்தித்து சுமூகமாகக் கலந்துரையாடினர்.
இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், நினைவு டோக்கன்களும் வழங்கப்பட்டதாக பி.எம்.டி தெரிவித்துள்ளது.