இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் மீதான தடையை ஃபிஃபா நீக்கியுள்ளது
பன்னாட்டு கால்பந்து சம்மேளனத்தால் முன்மொழியப்பட்ட பரிந்துரைகளுக்கு இணங்க, செப்டம்பர் 16 ஆம் தேதிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை கால்பந்து சம்மேளனத்திற்கு விதிக்கப்பட்ட தடையை உடனடியாக அமலுக்கு வரும் வகையில் நீக்குவதற்கு பன்னாட்டு கால்பந்து சம்மேளனம் தீர்மானித்துள்ளதாக பன்னாட்டு கால்பந்தாட்ட சம்மேளனம் அறிவித்துள்ளது.
அதன்படி, 2023 செப்டெம்பர் 29 ஆம் திகதி இலங்கைக் கால்பந்து சம்மேளன தேர்தல் நடைபெறும் வரை பன்னாட்டுக் கால்பந்துச் சம்மேளனம் மற்றும் ஆசிய கால்பந்து கூட்டமைப்பு நிலைமையை தொடர்ந்து கண்காணிக்கும் எனப் பன்னாட்டு கால்பந்தாட்ட சம்மேளனம் தெரிவித்துள்ளது.
பன்னாட்டு கால்பந்து சம்மேளனம் மற்றும் ஆசிய கால்பந்துக் கூட்டமைப்பு ஆகியவை கடுமையான நிபந்தனை அடிப்படையில் உத்தியோகபூர்வ உலகக் கோப்பை டிராவில் இலங்கையை அங்கீகரித்து சேர்த்தன. இதனால், இலங்கைக் கால்பந்துச் சம்மேளனம் தனது தேர்தலை இந்த உலகக் கோப்பை போட்டிக்கு 10 நாட்களுக்கு முன்னதாக நடத்த வேண்டும்.
பின்னர், இலங்கை கால்பந்து சம்மேளனம், பன்னாட்டு கால்பந்து சம்மேளன உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டிகளில் இலங்கை பங்கேற்க அனுமதிக்கும் வகையில், சம்மேளனத்தின் தேர்தலைச் செப்டம்பரில் நடத்த முடிவு செய்தது.
அதன்படி, பன்னாட்டு கால்பந்து சம்மேளனத்தால் முன்மொழியப்பட்ட பரிந்துரைகளுக்கு இணங்க, செப்டம்பர் 16 ஆம் தேதிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், ஜூலை 25 அன்று, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க, இலங்கைக் கால்பந்து சம்மேளனத் தேர்தலை நடத்துவதற்காக மூன்று பேர் கொண்ட குழுவை நியமித்தார்.