முன்பள்ளிக் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த பிஸ்கட் வழங்கப்படும்: கீதா குமாரசிங்க
குழந்தைகளுக்கு முட்டை போன்ற சத்தான உணவுகளை குறைந்த விலையில் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
சிறு குழந்தைகளின் போசாக்கு மட்டத்தை உயர்த்தும் வகையில் விசேட வேலைத்திட்டம் ஒன்று திட்டமிடப்பட்டுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
உத்தேச வேலைத்திட்டத்தின் கீழ் முன்பள்ளி சிறார்களுக்கு ஊட்டசத்து நிறைந்த பிஸ்கட் வகையொன்றை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக திருமதி குமாரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான வேலைத்திட்டம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என குறிப்பிட்ட அவர், குழந்தைகளுக்கு முட்டை போன்ற சத்தான உணவுகளை குறைந்த விலையில் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
“முன்பள்ளிக் குழந்தைகளுக்கு உயர் ஊட்டச்சத்துள்ள பிஸ்கட் வகையை வழங்குவதற்கான புதிய திட்டத்தை நாங்கள் தொடங்க உள்ளோம். அதற்கான ஏற்பாடுகளை தற்போது செய்து வருகிறோம், அடுத்த மாதம் முதல் குழந்தைகளுக்கு பிஸ்கட் விநியோகம் செய்யப்படும். மேலும், குழந்தைகளுக்கு முட்டை போன்ற சத்தான உணவு வகைகளை குறைந்த விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.