தோஷகானா வழக்கில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீதான குற்றப்பத்திரிக்கைக்கு இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் தடை
வழக்கின் வாக்குமூலங்களை பதிவு செய்யும் போது இந்த விஷயத்தைப் பார்ப்போம் என்று கூறிய நீதிபதி, இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்க முடியாது என்றும் கூறினார்.
தோஷகானா வழக்கில் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) தலைவரும் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் மீதான குற்றப்பத்திரிக்கைக்கு இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் (ஐஎச்சி) வெள்ளிக்கிழமை தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக ஏஆர்ஒய் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
வழக்கின் வாக்குமூலங்களை பதிவு செய்யும் போது இந்த விஷயத்தைப் பார்ப்போம் என்று கூறிய நீதிபதி, இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்க முடியாது என்றும் கூறினார்.
இம்ரான் கானின் வழக்கறிஞரின் வாதங்களைக் கேட்ட இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, குற்றப்பத்திரிகைக்கு தடை விதித்து, இம்ரான் கானுக்கு எதிரான தோஷகானா வழக்கில் குற்றவியல் நடவடிக்கைகளை நிறுத்துமாறு செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டதாக ஏஆர்ஒய் நியூஸ் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களுக்கு அறிவிக்கை அனுப்பப்பட்டது.