உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்காலச் செயலகம் யாழ்ப்பாணத்தில் பொதுமக்களின் ஆலோசனையைப் பெறுகிறது.
முக்கிய பங்குதாரர்களுடன் டிசம்பர் 10ஆம் தேதி முதல் டிசம்பர் 12ஆம் தேதி வரை கூடியது" என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்காலச் செயலகம் தனது ‘தேசிய மாகாண பொது ஆலோசனைகளை’ வட மாகாணம், யாழ்ப்பாணத்தில் இருந்து வெற்றிகரமாக ஆரம்பித்துள்ளது.
"உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்காலச் செயலகம், சிவில் சமூக அமைப்புகள், மதத் தலைவர்கள், மூத்த பேராசிரியர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், அடிமட்ட சமூகங்கள், பெண்கள் உரிமை இயக்கங்கள் உள்ளிட்ட முக்கிய பங்குதாரர்களுடன் டிசம்பர் 10ஆம் தேதி முதல் டிசம்பர் 12ஆம் தேதி வரை கூடியது" என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்கால செயலகம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தது. இது தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான நிலையான கட்டமைப்பை உருவாக்குவதற்கான நுண்ணறிவு மற்றும் பரிந்துரைகளை சேகரிப்பதை நோக்கமாகக் கொண்டது. நிலையான அமைதி மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு தடையாக உள்ள சமூக சவால்கள் மற்றும் முக்கிய பிரச்சினைகள் பற்றிய விரிவான ஆய்வு ஆகியவை அதன் கலந்துரையாடல்களில் அடங்கும்.
இடைக்கால செயலக அதிகாரிகள் முக்கிய மத பிரமுகர்களுடன் விரிவான ஆலோசனை நடத்தினர். அதில் நல்லூர் கோவில் தலைமைக் குருக்கள், யாழ் மறைமாவட்ட ஆயர் மேதகு டாக்டர் ஜஸ்டின் பி ஞானப்பிரகாசம், வண. யாழ் நாக விகாரையின் தாமிக தேரர் போன்றோர் இருந்தனர்
சமயத் தலைவர்கள் பொதுமக்களின் எதிர்பார்ப்புகள், கருத்துக்கள் மற்றும் கவலைகளை தெரிவித்ததுடன், நாட்டில் இன நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி நல்லிணக்க செயற்பாடுகள் வெற்றியடைய பிரார்த்தனைகளையும் ஆசீர்வாதங்களையும் வழங்கினர்.