2035 கார்பன் உமிழ்வு இலக்கு குறித்து பொதுமக்களின் கருத்துகளை அரசாங்கம் கோருகிறது
2026 ஆம் ஆண்டளவில் நாட்டின் உமிழ்வை 2005 நிலைகளுக்கு கீழே 20 சதவீதமும், 2026 ஆம் ஆண்டளவில் 2005 நிலைகளுக்கு கீழே 40 முதல் 45 சதவீதமும் குறைக்க அரசாங்கம் ஏற்கனவே இலக்கு வைத்துள்ளது.
மத்திய அரசு அதன் 2035 பசுமை இல்ல வாயு உமிழ்வு குறைப்பு இலக்கு குறித்து பொதுமக்களின் கருத்துகளைச் சேகரித்து வருகிறது.
நாடு முழுவதும் உள்ள கனேடியர்கள் மற்றும் பழங்குடியின மக்கள் தங்கள் எண்ணங்களை மெய்ந்நிகர் பொதுமக்கள் பங்கேற்பு மன்றத்தில் இப்போதிலிருந்து மார்ச் 28 வரை பகிர்ந்து கொள்ளலாம்.
கனடாவின் 2035 தேசிய பசுமை இல்ல வாயு உமிழ்வு இலக்கை அறிவிக்கவும் நிர்ணயிக்கவும் பொதுமக்களின் கருத்துக்கள் உதவும் என்று அரசாங்கம் கூறுகிறது. இந்த நடவடிக்கை கனேடிய நிகர-பூஜ்ஜிய உமிழ்வு பொறுப்புக்கூறல் சட்டம் மற்றும் பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் கனடாவின் பன்னாட்டுக் கடமைகளின் கீழ்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டளவில் நாட்டின் உமிழ்வை 2005 நிலைகளுக்கு கீழே 20 சதவீதமும், 2026 ஆம் ஆண்டளவில் 2005 நிலைகளுக்கு கீழே 40 முதல் 45 சதவீதமும் குறைக்க அரசாங்கம் ஏற்கனவே இலக்கு வைத்துள்ளது.
ஒரு செய்தி வெளியீட்டில், 2035 இலக்கை நிர்ணயிப்பது கனடா 2050 க்குள் நிகர பூஜ்ஜியத்தை அடைய பாதையில் இருக்க உதவும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.