ஓரினச் சேர்க்கை தம்பதிகளை ஆசிர்வதிக்க பாதிரியார்களுக்கு ஷில்லாங் மறைமாவட்டம் அனுமதி
கத்தோலிக்க திருச்சபையின் புதிய நிலைப்பாட்டிற்கு இணங்க, இந்தப் பிரகடனம் திருமணக் கோட்பாட்டை மாற்றாது என்றும், ஆசீர்வாதங்கள் திருமணத்தின் ஒப்புதலைக் குறிக்கவில்லை என்றும் அந்த அறிக்கை மேலும் தெளிவுபடுத்தியது.
மேகாலயாவில் உள்ள ஷில்லாங் மறைமாவட்டம் கத்தோலிக்க பாதிரியார்கள் ஓரினச் சேர்க்கையாளர்களை ஆசீர்வதிக்க அனுமதி அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
போப் பிரான்சிசின் ஒப்புதலுடன் வெளியிடப்பட்ட இந்தப் பிரகடனத்தில், இந்த ஆசீர்வாதங்கள் திருமணத்தின் போது திருச்சபையின் அதிகாரப்பூர்வ வழிபாட்டு மற்றும் சடங்கு ஆசீர்வாதங்களை ஒத்திருக்கவில்லை. மாறாக தனிப்பட்ட மற்றும் தன்னிச்சையான பிரார்த்தனையைக் குறிக்கின்றன என்று கூறுகிறது.
கத்தோலிக்க திருச்சபையின் புதிய நிலைப்பாட்டிற்கு இணங்க, இந்தப் பிரகடனம் திருமணக் கோட்பாட்டை மாற்றாது என்றும், ஆசீர்வாதங்கள் திருமணத்தின் ஒப்புதலைக் குறிக்கவில்லை என்றும் அந்த அறிக்கை மேலும் தெளிவுபடுத்தியது.
"ஆசீர்வாதங்களின் தனிப்பட்ட அர்த்தத்தை இந்த அறிவிப்பு வலியுறுத்துகிறது. இது முறைசாரா சொற்களைக் கொண்ட ஒரு பாதிரியாரின் தன்னிச்சையான பிரார்த்தனை. இது திருமணத்தின் போது திருச்சபையின் அதிகாரப்பூர்வ வழிபாட்டு மற்றும் சடங்கு ஆசீர்வாதங்கள் என்று தவறாகக் கருதக்கூடாது" என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.