Breaking News
மொன்றியலில் உள்ள யூதப் பள்ளி மீது இந்த வாரம் இரண்டாவது முறையாக துப்பாக்கிச் சூடு
அதிகாரிகள் யூத பள்ளி யெஷிவா கெடோலாவின் முகப்பில் புல்லட் துளைகளைக் கண்டுபிடித்தனர். இதில் காயங்கள் யாருக்கும் ஏற்படவில்லை.
மொன்றியலில் உள்ள யூதப் பள்ளி ஒன்று இந்த வாரம் இரண்டாவது முறையாக ஞாயிற்றுக்கிழமை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளது.
வான் ஹார்ன் அவென்யூவிற்கு அருகிலுள்ள டீகாண்ட் சாலையில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் பதிவாகியிருந்த கோட்-டெஸ்-நெய்ஜஸ் பகுதிக்கு அதிகாலை 5 மணியளவில் காவல் துறை அழைக்கப்பட்டது.
வந்தவுடன், அதிகாரிகள் யூத பள்ளி யெஷிவா கெடோலாவின் முகப்பில் புல்லட் துளைகளைக் கண்டுபிடித்தனர். இதில் காயங்கள் யாருக்கும் ஏற்படவில்லை.
இது குறித்து மொன்றியல் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.