முன்னாள் ஐஜிபி பூஜித் ஜயசுந்தர குற்றவியல் கடமை தவறிழைத்துள்ளார்: சட்டமா அதிபர்
சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பிரியந்த நாவன இந்த உண்மைகளை முன்வைத்தார்.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலை முன்னரே புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த போதிலும் அதனைத் தடுக்கத் தவறியதன் மூலம் குற்றவியல் கடமை தவறிழைத்துள்ளார் என சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பிரியந்த நாவன இந்த உண்மைகளை முன்வைத்தார்.
இது தொடர்பான குற்றச்சாட்டுக்களில் இருந்து முன்னாள் பொலிஸ் மா அதிபரை விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் பிறப்பித்த உத்தரவை நிராகரிக்குமாறு கோரியுள்ளது.
பிரீத்தி பத்மன் சூரசேன, யசந்த கோதாகொட, குமுதுனி விக்கிரமசிங்க, மஹிந்த சமயவர்தன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய நீதியரசர்கள் அடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.