உதயநிதி ஸ்டாலினின் 'சனாதன தர்மம்' கருத்துக்கு இந்தியா கூட்டணி மன்னிப்பு கேட்க வேண்டும்: ராஜ்நாத் சிங்
மன்னிப்புக் கேட்கவில்லையென்றால் நாடு அவர்களை மன்னிக்காது என்றார்.
சனாதன தர்மம் குறித்து திமுக தலைவர் உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியைப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று கடுமையாக சாடினார். சனாதன தர்மத்தை அவமதித்ததற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார். மன்னிப்புக் கேட்கவில்லையென்றால் நாடு அவர்களை மன்னிக்காது என்றார்.
பாஜகவின் பரிவர்த்தன் யாத்திரையை துவக்கி வைத்து ஜெய்சால்மரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராஜ்நாத் சிங், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் அசோக் கெலாட் ஆகியோர் இந்த விவகாரத்தில் ஏன் அமைதியாக இருக்கிறார்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.
சனாதன தர்மத்தை 'டெங்கு' மற்றும் 'மலேரியா'வுடன் ஒப்பிட்டு, அதை 'எதிர்க்காமல்' 'அழிக்க வேண்டும்' என, ஆளும் தி.மு.க., அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின் சனிக்கிழமை கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.