Breaking News
பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் காணாமல் போகவில்லை: அதிகாரிகள் தகவல்
அவர்கள் காணாமல் போகவில்லை என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டிப் பி.டி.ஐ வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
2002 ஆம் ஆண்டு பில்கிஸ் பானு கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட 11 பேரும் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர், அவர்கள் 'போலீஸ் கண்காணிப்பில்' உள்ளனர். அவர்கள் காணாமல் போகவில்லை என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டிப் பி.டி.ஐ வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
"உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை (ஜனவரி 8 அன்று, குஜராத் அரசு வழங்கிய மன்னிப்பை ரத்து செய்தது) வழங்கியதிலிருந்து அவர்கள் காவல்துறைக் கண்காணிப்பில் உள்ளனர்" என்று லிம்கேடா பிரிவு உதவி காவல்துறை சூப்பிரண்டு பிஷாகா ஜெயின் கூறினார். "நாங்கள் அவர்கள் அனைவரையும் அன்றைய தினமே தொடர்பு கொண்டோம். தீர்ப்புக்குப் பிறகு அவர்கள் தொடர்பு கொள்ளாமல் போகும் எண்ணம் இருந்ததாகத் தெரியவில்லை."