Breaking News
ஹமாஸ் வசம் உள்ள அனைத்து பணயக்கைதிகளும் திரும்ப ஒப்படைக்கப்படுவார்கள்: பெஞ்சமின் நெதன்யாகு உறுதி
போர் நிறுத்தத்தின் முதல் நாளில், ஹமாஸ் 13 இஸ்ரேலியர்கள் உட்பட 24 பிணைக்கைதிகளை விடுவித்தது.
இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையிலான போர் நிறுத்தம் சனிக்கிழமை இரண்டாவது நாளை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாலஸ்தீன குழுவால் சிறைபிடிக்கப்பட்ட அனைத்து பணயக்கைதிகளையும் திருப்பி அனுப்புவதாக உறுதியளித்தார். போர் நிறுத்தத்தின் முதல் நாளில், ஹமாஸ் 13 இஸ்ரேலியர்கள் உட்பட 24 பிணைக்கைதிகளை விடுவித்தது.
இந்த ஒப்பந்தத்தின்படி, அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் மீதான திடீர் தாக்குதலின் போது பிடிபட்ட பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவிக்கும் என்றும், இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனியர்களை விடுவிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 13 இஸ்ரேலியர்களுக்கு ஈடாக 39 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.