Breaking News
நிலையான பொருளாதார மீட்சிக்கு அரசாங்கம் முன்னோடி: ஜனாதிபதி
பாதாளத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட பொருளாதாரத்தை நிலையான முறையில் மீட்டெடுப்பதில் அரசாங்கம் ஏற்கனவே வெற்றி பெற்றுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

ஊழல் மற்றும் மேட்டுக்குடி முறைமையால் பாதாளத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட பொருளாதாரத்தை நிலையான முறையில் மீட்டெடுப்பதில் அரசாங்கம் ஏற்கனவே வெற்றி பெற்றுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
பன்னாட்டு தொழிலாளர் தின செய்தியை வெளியிட்ட திசாநாயக்க, அரச ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தை கணிசமாக அதிகரிப்பதற்கும், விவசாயிகள், மீனவ சமூகம், இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள், உற்பத்தியாளர்கள், சிறு தொழில் முனைவோர் மற்றும் தொழில் வல்லுநர்கள் உட்பட சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்கு விரிவான நன்மைகளை வழங்குவதற்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நடவடிக்கையை எடுத்துரைத்தார்.