அதானி காற்றாலை திட்டத்தை மீளாய்வு செய்ய சிறிலங்காவின் புதிய அரசாங்கம் முடிவு
திசாநாயக்க இந்தத் திட்டத்தை சிறிலங்காவின் எரிசக்தி இறையாண்மைக்கு அச்சுறுத்தல் என்று கூறியதுடன், அதை ரத்து செய்வதாகவும் உறுதியளித்தார்.
சிறிலங்காவின் புதிய அரசாங்கம் அதானி குழுமத்துடனான காற்றாலை மின் ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வதாகக் கூறியுள்ளது. இது வெளிநாடுகளில் விரிவாக்கம் செய்ய முயற்சிக்கும் இந்தியக் குழுமத்திற்கு புதிய தடையை ஏற்படுத்தியுள்ளது.
அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தின் திட்டங்களுக்கான மின்சார கட்டணங்களுக்கு முந்தைய நிர்வாகம் ஒப்புதல் அளித்தது "ஒரு சிக்கல்" என்று செவ்வாய்க்கிழமை அமைச்சரவை அமைச்சர்கள் கூட்டத்திற்குப் பிறகு வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். நவம்பர் 14-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், புதிய அரசு இந்த ஒப்பந்தத்தை மீண்டும் பரிசீலிக்கும் என்றார் அவர்.
அதானி பசுமை ஒப்பந்தத்தை மறு மதிப்பீடு செய்வதற்கான நகர்வு, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் பிரச்சார வாக்குறுதியைப் பின்பற்றுகிறது, அவர் கடந்த மாதம் நெருக்கமான மும்முனை போட்டியின் பின்னர் பதவியேற்றார்.
திசாநாயக்க இந்தத் திட்டத்தை சிறிலங்காவின் எரிசக்தி இறையாண்மைக்கு அச்சுறுத்தல் என்று கூறியதுடன், அதை ரத்து செய்வதாகவும் உறுதியளித்தார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் முக்கிய திட்டங்கள் குறித்து கொள்கை முடிவுகள் எதுவும் எடுக்கப்படாது என்று ஹேரத் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். திசாநாயக்க வெற்றி பெற்ற போதிலும், இலங்கையின் 225 ஆசனங்களைக் கொண்ட சட்டமன்றத்தில் அவரது அணிக்கு மூன்று இடங்கள் மட்டுமே இருந்தன.