Breaking News
பன்னாட்டு நாணய நிதியத்தின் உடன்படிக்கை எந்தவொரு அரசாங்கத்தின் கீழும் தொடரப்பட வேண்டும் - இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர்
எந்தவொரு அரசாங்கத்தின் கீழும், அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு விரிவாக்கப்பட்ட நிதிய வசதித் திட்டம் தொடர வேண்டும் என்று விளக்கினார்.
பன்னாட்டு நாணய நிதியத்துடனான விரிவாக்கப்பட்ட நிதிய வசதி உடன்படிக்கையின் தொடர்ச்சியின் முக்கியத்துவத்தை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தல வீரசிங்க வலியுறுத்தியுள்ளார்.
நேற்று (டிசம்பர் 29) பிற்பகல் இடம்பெற்ற விசேட சந்திப்பில் உரையாற்றிய கலாநிதி வீரசிங்க, தேவையான கடன் நிவாரணம் மற்றும் பன்னாட்டு நிதி உதவியைப் பெறுவதற்காக, எந்தவொரு அரசாங்கத்தின் கீழும், அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு விரிவாக்கப்பட்ட நிதிய வசதித் திட்டம் தொடர வேண்டும் என்று விளக்கினார்.
பன்னாட்டு நாணய நிதியம்- விரிவாக்கப்பட்ட நிதிய வசதி ஒப்பந்தத்தில் இருந்து ஒருதலைப்பட்சமாக விலகுவது கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும் என்று அவர் எச்சரித்தார்.