Breaking News
குர்பத்வந்த் சிங் பன்னூன் இந்தியாவில் உலகக் கோப்பையை சீர்குலைப்பதாக அச்சுறுத்துகிறார்: அறிக்கை
காலிஸ்தானி ஆதரவு தலைவரும், பயங்கரவாதியாக நியமிக்கப்பட்ட குர்பத்வந்த் சிங் பன்னுன் மிரட்டல் விடுத்துள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
2023ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை சீர்குலைக்கப்போவதாக காலிஸ்தானி ஆதரவு தலைவரும், பயங்கரவாதியாக நியமிக்கப்பட்ட குர்பத்வந்த் சிங் பன்னுன் மிரட்டல் விடுத்துள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
சமூக ஊடகங்களில் பரவும் ஒரு வீடியோவில், சமீபத்தில் கனடாவில் அடையாளம் தெரியாத ஆசாமிகளால் கொல்லப்பட்ட காலிஸ்தானி சார்பு தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் மரணத்திற்கு பழிவாங்குவதாக பன்னுன் மிரட்டுகிறார்.
நாடகத் தனமான இசை மற்றும் மலிவான வரைகலை (கிராபிக்ஸ்) மூலம் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் கையெறி குண்டுகள் வீசப்படுவதைச் சித்தரித்து, சீக்கியர்களின் சுயநிர்ணய உரிமை நிறைவேறும் வரை 2023 கிரிக்கெட் உலகக் கோப்பையை நிறுத்துமாறு பன்னூன் அழைப்பு விடுக்கிறார்.