Breaking News
2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலை ஜனவரி 28ஆம் தேதி நடத்த பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது
பாகிஸ்தானின் முக்கிய செய்தி நிறுவனமான ஜியோ நியூஸ், ஆதாரங்களை மேற்கோள் கட்டி ஜனவரி தேதியைச் சுட்டிக்காட்டியது.
பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் ஜனவரி 28ஆம் தேதியை அடுத்த பொதுத் தேர்தலுக்கான தேதியாக நிர்ணயம் செய்து வருவதாக வெள்ளிக்கிழமை ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“வரவிருக்கும் தேர்தல்களுக்கான அதன் தயாரிப்புகளைத் தொடங்கும் உயர்மட்ட தேர்தல் அமைப்பு, அடுத்த இரண்டு நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமாக பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்திற்கு தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது”என்று பாகிஸ்தானின் முக்கிய செய்தி நிறுவனமான ஜியோ நியூஸ், ஆதாரங்களை மேற்கோள் கட்டி ஜனவரி தேதியைச் சுட்டிக்காட்டியது.
சரியான நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பான வழக்கில் ஆணையத்தின் பதிலை உச்ச நீதிமன்றம் கோரியதை அடுத்து, பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்க உள்ளது.