நான் ஒரு சதத்தையாவது மோசடி செய்திருந்தால் என்னை சிறையில் தள்ளுங்கள்: அநுரகுமார திசாநாயக்க சவால்
“நானோ, எங்கள் கட்சியை சேர்ந்த யாரோ ஒரு சதம் மக்களைக் கூட ஏமாற்றியதில்லை, அப்படிச் செய்திருந்தால், இப்படி அரசியல் செய்ய முடியாது. ஆட்சியில் இருந்தபோது அவர்களின் மோசடி, ஊழலை அவர்களின் பெயர்களை வைத்து வெளிப்படுத்தினோம்.
சிலர் கூறுவது போல் மக்களுக்குச் சொந்தமான ஒரு சதத்தையாவது நான் மோசடி செய்திருந்தால் என்னை சிறையில் அடைக்கலாம் என ஜேவிபி தலைவர் அனுரகுமார திசாநாயக்க பகிரங்க சவால் விடுத்தார்.
கம்பஹாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசிய அவர், ஜே.வி.பி கடல்கடந்த கணக்குகளை பராமரித்து வருவதாக குறிப்பிட்ட சிலர் கூறுவதாகவும், அதன்பின்னர், அனுரகுமாரவை குறைந்தபட்சம் ஒரு நாளாவது சிறையில் அடைக்க வேண்டும் என அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ச குட்டியாராச்சி தெரிவித்தார்.
“நானோ, எங்கள் கட்சியை சேர்ந்த யாரோ ஒரு சதம் மக்களைக் கூட ஏமாற்றியதில்லை, அப்படிச் செய்திருந்தால், இப்படி அரசியல் செய்ய முடியாது. ஆட்சியில் இருந்தபோது அவர்களின் மோசடி, ஊழலை அவர்களின் பெயர்களை வைத்து வெளிப்படுத்தினோம். இதுபோன்ற தவறான செயல்களில் நாங்கள் ஈடுபட்டிருந்தால், நாங்கள் ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டிருப்போம்," என்று அவர் கூறினார்.