Breaking News
ரொறன்ரோவில் நடந்த விபத்து மரணம் ஒரு கொலையாக விசாரிக்கப்படுகிறது
குயின் தெரு கிழக்கு மற்றும் ஷெர்போர்ன் தெரு பகுதியில் இரவு 11 மணியளவில் ஒரு ஆண் பாதசாரி இடிக்கப்பட்டார்.
திங்கட்கிழமை பிற்பகுதியில் ரொறன்ரோ நகரத்தில் வாகனம் மோதிய மரணம் ஒரு கொலையாக விசாரிக்கப்பட்டு வருவதாகக் காவல் துறை கூறுகிறது.
குயின் தெரு கிழக்கு மற்றும் ஷெர்போர்ன் தெரு பகுதியில் இரவு 11 மணியளவில் ஒரு ஆண் பாதசாரி இடிக்கப்பட்டார். காவல் துறை அதிகாரிகளால் இதுவரை அடையாளம் காணப்படாத அந்த ஆண், சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
அவர் எப்படி சாலையில் வந்தார் என்பதும் ஓட்டுநரின் தொடர்பும் முதற்கட்ட விசாரணையின் ஒரு பகுதியாகும் என்று காவல் துறை தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட வாகனம் சில்வர் (நான்கு-கதவு) செடான் என்று விவரிக்கப்படுகிறது.