2025ஆம் ஆண்டுக்குள் போர் தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதே சிறிலங்காவின் இலக்கு: ஜனாதிபதி ரணில்
ஜயதிலக்க, சிறிலங்காவில் சமூக, கலாசார, சமய மற்றும் கல்வி அம்சங்களில் குடிமக்களின் பங்கேற்பு ஊடாக வலுவான அடித்தளத்தை நிறுவுவதில் முக்கிய பங்கு வகித்தவர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள், மறைந்த திரு. டி.பி அவர்களால் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு நிகரான ஒரு வேலைத்திட்டத்தின் அவசியத்தை எடுத்துரைத்தார். ஜயதிலக்க, சிறிலங்காவில் சமூக, கலாசார, சமய மற்றும் கல்வி அம்சங்களில் குடிமக்களின் பங்கேற்பு ஊடாக வலுவான அடித்தளத்தை நிறுவுவதில் முக்கிய பங்கு வகித்தவர்.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (07) பிற்பகல் இடம்பெற்ற கொழும்பு இளைஞர் பௌத்த சங்கத்தின் (YMBA) 125 ஆவது ஆண்டு விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி, நிகழ்காலத்தை விட எதிர்காலத்தை மையமாகக் கொண்டு, ஒரு இலங்கை தேசமாக கூட்டு முன்னேற்றத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
125 வது ஆண்டு நிறைவுக்கான கருப்பொருள், ‘ஒரே இலங்கை சொற்பொழிவு’ என்பது நாட்டின் தற்போதைய தேவைகளுடன் ஒத்துப்போகிறது. 2025 ஆம் ஆண்டளவில் போர் தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதுடன், இடம்பெயர்ந்த மற்றும் காணாமல் போனவர்களுக்கு அரசியல் தீர்வுகளை வழங்குவதே இலக்காகும் என்றார்.