பாகிஸ்தானின் குவாடர் துறைமுகம் மீது திடீர் தாக்குதல்
பாதுகாப்பு படையினர் நடத்திய பதிலடி தாக்குதலில் 2 தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவாடர் துறைமுக வளாகத்தில் புதன்கிழமை அடையாளம் தெரியாத துப்பாக்கி ஏந்தியவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்றுள்ளது.
அவர்களுக்கும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடப்பதற்கு முன்பு தாக்குதல் நடத்தியவர்கள் குண்டுவெடிப்புகளை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பு படையினர் நடத்திய பதிலடி தாக்குதலில் 2 தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.
குவாடர் துறைமுகம் என்பது சீனா-பாகிஸ்தான் பொருளாதாரத் தாழ்வாரத்தின் (சிபிஇசி) ஒரு பகுதியாகும். இப்பகுதியில் பல பத்தாண்டுகளாகப் பிரிவினைவாத கிளர்ச்சி இருந்தபோதிலும், சீனா தனது கடல் வழி மற்றும் சாலை வழிப் போக்குவரத்து முன்முயற்சியின் கீழ் கனிம வளம் நிறைந்த பலுசிஸ்தானில் குவாடர் அபிவிருத்தி உட்பட பெருமளவில் முதலீடு செய்துள்ளது.