Breaking News
விமானிகளின் அர்ப்பணிப்பு இல்லாமையால் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பிரச்சினைகளை எதிர்கொள்கிறது: அமைச்சர்
தற்போது 15 விமானங்கள் மட்டுமே இயங்கும் போது 266 விமானிகள் இருப்பதாகவும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் எதிர்நோக்கிய பிரச்சினை விமானிகளின் பற்றாக்குறையினால் ஏற்பட்டுள்ளது அல்ல. தற்போதுள்ள விமானிகளின் அர்ப்பணிப்பின்மையினால் அது ஏற்பட்டுள்ளதாக பொது விமானச் சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கன் 26 விமானங்களை இயக்கிய போது 316 விமானிகள் மட்டுமே இருந்ததாகவும், தற்போது 15 விமானங்கள் மட்டுமே இயங்கும் போது 266 விமானிகள் இருப்பதாகவும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், 26 விமானங்களை இயக்குவதற்கு 316 விமானிகள் இருந்தபோது, நடவடிக்கைகள் சுமூகமாக நடந்ததாகவும், விமானிகளின் அர்ப்பணிப்பு குறைபாடு காரணமாகவே தற்போது விமானச் சேவை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.