Breaking News
மன்னாரில் 15 மெகாவாட் காற்றாலை மின்சாரம் தேசிய மின் அமைப்பில் சேர்ப்பு
காற்றாலை விசையாழிகளுடன் கூடிய காற்றாலை மின் உற்பத்தி நிலையம் உள்ளூர் பொறியியலாளர்களைக் கொண்டு நிர்மாணிக்கப்பட்டு, திட்டமிடப்பட்ட முடிவிற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டதாக விஜேசேகர குறிப்பிட்டார்.
மன்னாரில் இன்று (ஆகஸ்ட் 06) காலை 15 மெகா வொட்ஸ் காற்றாலை மின்சாரம் தேசிய மின்வட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இது குறித்து டுவிட்டரில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விண்ட் ஃபோர்ஸ் மற்றும் ஹிருராஸ் பவர் ஆகிய நிறுவனங்களால் 06 காற்றாலை விசையாழிகளுடன் கூடிய காற்றாலை மின் உற்பத்தி நிலையம் உள்ளூர் பொறியியலாளர்களைக் கொண்டு நிர்மாணிக்கப்பட்டு, திட்டமிடப்பட்ட முடிவிற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டதாக விஜேசேகர குறிப்பிட்டார்.
"காற்று நிறைந்த மன்னார் காற்று மண்டலத்தில் அமைந்துள்ள இந்த தனித்துவமான திட்டம் சிறிலங்காவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்திப் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை குறிக்கிறது" என்று விண்ட் ஃபோர்ஸ் தெரிவித்துள்ளது.