தமிழ்நாட்டில் மனைவியின் சகோதரர்களால் கணவர் வெட்டிக் கொலை
நந்தினியின் சகோதரர்களான பாலமுருகன், தனபாலமுருகன் ஆகியோர் மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் 26 வயது இளைஞர் ஒருவர் தனது மனைவியின் உறவினர்களால் புதன்கிழமை இரவு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து காவல்துறை கூறியதாவது: கார்த்திக்பாண்டி என்பவர், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு 22 வயதான நந்தினியை திருமணம் செய்து கொண்டார்.
புதன்கிழமை (ஜூலை 24) கார்த்திக்பாண்டி தனது மனைவியை அவர் வேலை செய்யும் சூப்பர் மார்க்கெட் கடையில் இருந்து அழைத்துச் செல்லச் சென்றபோது, நந்தினியின் உறவினர்களால் கூர்மையான பொருளால் தாக்கப்பட்டார்.
இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் கார்த்திபாண்டியை விருதுநகர் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
நந்தினியின் சகோதரர்களான பாலமுருகன், தனபாலமுருகன் ஆகியோர் மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைப் பிடிக்கத் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.