Breaking News
கல்கரி தங்கும் விடுதியில் கைது செய்யப்பட்டவர் மரணம்
அவசரச் சேவை ஊழியர்களின் சிகிச்சை இருந்தபோதிலும், அந்த மனிதர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
தென்கிழக்கு கல்கரி விடுதி ஒன்றில் இன்று அதிகாலை இடம்பெற்ற கலவரம் தொடர்பில் காவல்துறையால் கைது செய்யப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அதிகாலை 1 மணிக்கு சற்று முன்னர், மெக்ளீட் டிரெயில் தென் கிழக்கில் (Macleod Trail SE) உள்ள கேரேஜ் அவுஸ் ஓட்டல் அண்ட் கான்பிரன்ஸ் சென்டரின் புகாருக்கு (Carriage House Hotel and Conference Centre) அதிகாரிகள் விடையிறுத்தனர்.
அந்த மனிதர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டார். சிறிது நேரத்திற்குப் பிறகு மருத்துவ நெருக்கடிக்கு ஆளானார்.
அவசரச் சேவை ஊழியர்களின் சிகிச்சை இருந்தபோதிலும், அந்த மனிதர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
அதிகாரிகளுக்கோ, பொதுமக்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.