Breaking News
அஜித் ரோஹனவின் மனு பரிசீலனைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது
அஜித் ரோஹன தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை ஆகஸ்ட் 03, 2023 அன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தம்மை இடமாற்றம் செய்ய எடுக்கப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை ஆகஸ்ட் 03, 2023 அன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மனு கடந்த 17ஆம் திகதி உச்ச நீதிமன்ற நீதியரசர்களான பிரீத்தி பத்மன் சூரசேன மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.