Breaking News
காசோலை மோசடி வழக்கில் இருந்து திலினி பிரியமாலி விடுதலை
குறித்த வழக்கு டிசம்பர் 11 விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே இந்த உத்தரவை பிறப்பித்தார்.
பெரும் நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட தொழிலதிபர் திலினி பிரியமாலி, ரூ.8 மில்லியன் மதிப்பிலான வாகனம் வாங்குவதற்கு போதிய பணமில்லாமல் வங்கிக் கணக்கில் காசோலையை வழங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, குறித்த வழக்கு டிசம்பர் 11 விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே இந்த உத்தரவை பிறப்பித்தார்.
ஒருவரிடமிருந்து 8 மில்லியன் ரூபா பெறுமதியான வாகனத்தை கொள்வனவு செய்வதற்கு நிதியில்லாமல் வங்கிக் கணக்கிலிருந்து காசோலையை வழங்கியதன் மூலம் பிரியமாலி கிரிமினல் நம்பிக்கை மீறலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்திச் சட்டமா அதிபரால் வழக்கு பதிவு செய்யப்பட்டது.