Breaking News
பாஜகவின் தலித், பழங்குடியினருக்கு எதிரான முகம் அம்பலமானது: ம.பி.யில் சிறுநீர் கழித்த சம்பவம் குறித்து ராகுல் காந்தி விமர்சனம்
ராகுல் காந்தி, பழங்குடியினர் மற்றும் தலித்துகள் மீதான பாஜகவின் வெறுப்பின் உண்மையான முகம் இந்த மனிதாபிமானமற்ற செயலால் அம்பலமானது என்று கூறியுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தலைவர் என்று கூறப்படும் ஒருவர் பழங்குடியின தொழிலாளி மீது சிறுநீர் கழித்த சம்பவம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமை அதிருப்தி தெரிவித்தார்.
டுவிட்டரில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, பழங்குடியினர் மற்றும் தலித்துகள் மீதான பாஜகவின் வெறுப்பின் உண்மையான முகம் இந்த மனிதாபிமானமற்ற செயலால் அம்பலமானது என்று கூறியுள்ளார்.
“பாஜக ஆட்சியில் பழங்குடியினச் சகோதர சகோதரிகள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. மத்தியப் பிரதேசத்தில் பாஜக தலைவரின் மனிதாபிமானமற்ற குற்றத்தால் ஒட்டுமொத்த மனிதகுலமே அவமானமடைந்துள்ளது” என்று காங்கிரஸ் தலைவர் கூறினார்.