Breaking News
தெலுங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் வெடி விபத்து: 4 பேர் பலி
எஸ்.பி. ஆர்கானிக்ஸ் கெமிக்கல் நிறுவனத்தில் சுமார் 20 தொழிலாளர்கள் பணியில் இருந்தபோது மாலை 5 மணியளவில் ஒரு இரசாயன உலை வெடித்தது.
தெலுங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டத்தில் ரசாயன நிறுவனத்தில் ஏற்பட்ட பயங்கர குண்டுவெடிப்பில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 16 பேர் படுகாயம் அடைந்தனர்.
எஸ்.பி. ஆர்கானிக்ஸ் கெமிக்கல் நிறுவனத்தில் சுமார் 20 தொழிலாளர்கள் பணியில் இருந்தபோது மாலை 5 மணியளவில் ஒரு இரசாயன உலை வெடித்தது.
நான்கு இறப்புகளை சங்காரெட்டி மாவட்ட ஆட்சியர் உறுதிப்படுத்தினார். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குண்டுவெடிப்பில் இறந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கையைக் காவல்துறையினர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.