பாதாள உலக நாயகன் 'மன்னா ரொஷான்' கொலை வழக்கில் கூடுதல் தகவல் வெளியானது
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் கயந்த மாரப்பனவின் மேற்பார்வையின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பிரபல குற்றக் கும்பலின் உறுப்பினரான "மன்னா ரொஷான்" என அழைக்கப்படும் டொன் ரொஷான் இந்திக்க மற்றும் அவரது கூட்டாளிகளில் ஒருவரின் சடலங்கள் நேற்றுக் (25) காலை படுக்க துன்னன பிரதேசத்தில் உள்ள காலி காணி ஒன்றில் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளன.
தற்போது துபாயில் பதுங்கியிருக்கும் லலித் கன்னங்கரா என அழைக்கப்படும் பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரிடம் இருந்து போதைப்பொருளை கொள்வனவு செய்யும் நோக்கில் இருவரும் குறித்த இடத்திற்கு வந்துள்ளதாக சந்தேகிக்கப்படும் போது, குறித்த நபர் குழுவொன்று அவர்களை துப்பாக்கியால் சுட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
"மன்னா ரோஷனை" கொலை செய்வதற்காக லலித் கன்னங்கரா ஒப்பந்தம் செய்யப்பட்டு பணம் கொடுக்கப்பட்டதை அடுத்து, லலித் கன்னங்கரா என்பவரின் வழிகாட்டலில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் கயந்த மாரப்பனவின் மேற்பார்வையின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.