ராஜஸ்தானில் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் ஆதரவாளர்கள் மோதல்
ஒருவரையொருவர் எதிர்த்து முழக்கங்களை எழுப்பினர். இது அவர்களுக்கு இடையே கைகலப்புக்கு வழிவகுத்தது" என்று காங்கிரஸ் நகரத் தலைவர் விஜய் ஜெயின் கூறினார்.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் ஆதரவாளர்கள் வியாழக்கிழமை அஜ்மீரில் கட்சித் தொண்டர்களுடனான கருத்துக் கூட்டத்திற்கு முன்னதாக ஒருவருக்கொருவர் கைகலப்பில் ஈடுபட்டனர்.
கிறிஸ்டியன்கஞ்ச் காவல் நிலைய அலுவலக அதிகாரி கரண் சிங் கூறுகையில், இரு தலைவர்களின் ஆதரவாளர்களுக்கும் இருக்கை அமைப்பதில் தகராறு ஏற்பட்டது. இது கைகலப்புக்கு வழிவகுத்தது.
அஜ்மீர் சரஸ் பால் பண்ணையின் தலைவர் ராம்சந்திர சவுத்ரி மற்றும் ராஜஸ்தான் சுற்றுலா வளர்ச்சிக் கழகத் தலைவர் தர்மேந்திர ரத்தோர் ஆகியோரின் ஆதரவாளர்கள் வந்திருந்த காங்கிரஸ் அலுவலகப் பொறுப்பாளர்கள் கூட்டம் அது. அவர்கள் ஒருவரையொருவர் எதிர்த்து முழக்கங்களை எழுப்பினர். இது அவர்களுக்கு இடையே கைகலப்புக்கு வழிவகுத்தது" என்று காங்கிரஸ் நகரத் தலைவர் விஜய் ஜெயின் கூறினார்.
காவல் நிலைய அலுவலக அதிகாரி கரண் சிங் கூறுகையில், சம்பவ இடத்தில் இருந்த காவல்துறையினர் தலையிட்டு போராட்டக்காரர்களைச சமாதானப்படுத்தினர். பெரிய காயம் ஏதும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.
Image Courtes : PTI