அரசியல் செல்வாக்கு இல்லாத கல்வியாக இருக்க வேண்டும்: ஜனாதிபதி ரணில்
நேற்று (23) பிற்பகல் கொழும்பு தாமரைத் தடாகக் கலையரங்கில் நடைபெற்ற அகில இலங்கை தொழில்சார் விரிவுரையாளர்கள் சங்கத்தின் 10 ஆவது ஈராண்டு மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கல்வியை அரசியல்மயப்படுத்தும் ஆபத்தை வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அத்தகைய நடவடிக்கை தவிர்க்க முடியாமல் நாட்டின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்று எச்சரித்தார்.
அடுத்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குள் நாட்டிற்கு மிகவும் பயனுள்ள கல்வி முறையை உருவாக்க அனைத்து பங்குதாரர்களும் தனிப்பட்ட சார்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு, கூட்டு விவாதங்களில் ஈடுபட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
நேற்று (23) பிற்பகல் கொழும்பு தாமரைத் தடாகக் கலையரங்கில் நடைபெற்ற அகில இலங்கை தொழில்சார் விரிவுரையாளர்கள் சங்கத்தின் 10 ஆவது ஈராண்டு மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரசாங்கத்தின் எதிர்வரும் கல்விச் சீர்திருத்தங்கள் கல்வி நிபுணர்களை மாத்திரம் உள்ளடக்கியதாக அமையாது, பாடசாலை ஆசிரியர்கள், பொருளாதாரத் துறையைச் சேர்ந்த தொழில்வாண்மையாளர்கள் மற்றும் அகில இலங்கை தொழில்சார் விரிவுரையாளர்கள் சங்கம் (APLA) போன்ற அமைப்புகளின் உள்ளீடுகளையும் வரவேற்கும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், நாட்டில் கல்வியின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் உள்ளடக்கிய உரையாடலின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தினார்.