தடை உத்தரவு விசாரணையை ஒத்திவைக்க மனிடோபா நீதிபதியிடம் முற்றுகை போராட்டக்காரர்களின் வழக்கறிஞர் கோரிக்கை
வின்னிபெக் நகரம், எதிர்ப்பாளர்களை அகற்றக் கோரி, மன்னர் அமர்வு (கிங்ஸ் பெஞ்ச்) நீதிமன்றத்தில் செவ்வாயன்று ஒரு விண்ணப்பத்தை தாக்கல் செய்தது.
வின்னிபெக் குப்பைக் கிடங்கில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிலரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர், முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தடை உத்தரவு மீதான நீதிமன்ற விசாரணையை ஒத்திவைக்குமாறு கோரியுள்ளார்.
ப்ரேடி கிரீன் என அழைக்கப்படும் நகருக்கு வடக்கே உள்ள வேறு நிலப்பரப்பைத் தேடக் கோரி, பிராடி ரோடு குப்பைக் கிடங்கிற்கு செல்லும் பிரதான சாலையைப் பல எதிர்ப்பாளர்கள் மறித்துள்ளனர். அங்கு கொல்லப்பட்ட இரண்டு பழங்குடியின பெண்களின் எச்சங்கள் கடந்த ஆண்டு வீசப்பட்டதாக நம்பப்படுகிறது.
வின்னிபெக் நகரம், எதிர்ப்பாளர்களை அகற்றக் கோரி, மன்னர் அமர்வு (கிங்ஸ் பெஞ்ச்) நீதிமன்றத்தில் செவ்வாயன்று ஒரு விண்ணப்பத்தை தாக்கல் செய்தது.
வழக்கறிஞர் சச்சா, “பால் நீதிமன்றத்தில் அவசர முடிவு எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் குப்பை கிடங்கிற்கு மாற்று பாதை திறக்கப்பட்டுள்ளது”, என்று வாதிட்டார். ஆனால் இது அதிக அளவு கனரக லாரிகளை கையாளும் வகையில் இல்லை என்று நகரம் கூறுகிறது.