இன்று எதிர்வரும் தேர்தல்கள் குறித்து ஐ.தே.க தலைமை கலந்துரையாடுகிறது
ஐக்கிய தேசியக் கட்சியின் வேலைத்திட்டம் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் புதிய அதிகாரிகள் சபையுடன் அமல்படுத்தப்படவுள்ளது.
எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் மத்தியில் இன்று (27) கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கட்சியின் தலைமையகமான 'சிறிகொத்த'வில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் வேலைத்திட்டம் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் புதிய அதிகாரிகள் சபையுடன் அமல்படுத்தப்படவுள்ளது.
தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு, இந்த புதிய அதிகாரிகள் குழுவும் ஒரு தீர்க்கமான காரணியாகும். மேலும் வரும் ஆண்டில் நடைபெறவிருக்கும் தேர்தலுக்காக இந்த அதிகாரிகள் குழுவுக்கும் ஒரு பெரிய பொறுப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
அதற்கமைய இன்றைய கலந்துரையாடல் இது தொடர்பான முக்கிய கலந்துரையாடலாக இருக்கும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.