ராம்லீலா நாடகத்தில் ஆட்சேபனைக்குரிய காட்சிகள்: புனே பல்கலைக்கழக பேராசிரியர், மாணவர்கள் கைது
புனே பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியாக உள்ள புனே லலித் கலா கேந்திராவின் மாணவர்களுக்கும் வெள்ளிக்கிழமை மாலை அரங்கேற்றப்பட்ட இந்த நாடகம் தொடர்பாக மோதல் ஏற்பட்டது.
ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட நாடகத்தை அரங்கேற்றி மத உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக புனே பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மற்றும் ஐந்து மாணவர்கள் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர். இந்த நாடகத்தில் ஆட்சேபகரமான வசனங்களும் காட்சிகளும் இருப்பதாக கூறப்படுகிறது. அதில் ஒரு ஆண் நடிகர் சீதையாக உடையணிந்து சிகரெட் புகைப்பதையும் காட்டுகிறது. ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் இணைந்த அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் நிர்வாகிகளுக்கும், புனே பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியாக உள்ள புனே லலித் கலா கேந்திராவின் மாணவர்களுக்கும் வெள்ளிக்கிழமை மாலை அரங்கேற்றப்பட்ட இந்த நாடகம் தொடர்பாக மோதல் ஏற்பட்டது.
ஏபிவிபியின் ஹர்ஷ்வர்தன் ஹர்புடே அளித்த புகாரின் அடிப்படையில், பிரிவு 295 (ஏ) மற்றும் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிற தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை ஆய்வாளர் அங்குஷ் சிந்தாமன் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக லலித் கலா கேந்திராவின் துறைத் தலைவர் முனைவர் பிரவீன் போலே மற்றும் மாணவர்கள் பாவேஷ் பாட்டீல், ஜெய் பெட்னேகர், பிரதமேஷ் சாவந்த், ரிஷிகேஷ் தால்வி மற்றும் யாஷ் சிக்லே ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.