ஒரே பாலின தம்பதிகளுக்கு சேவை செய்ய வணிகம் மறுக்கலாம்: அமெரிக்க உச்ச நீதிமன்றம்
ஆறு பழமைவாத நீதிபதிகளும் வடிவமைப்பாளரின் பக்கம் இருந்தனர்.
ஒரே பாலின ஜோடிகளுக்கு திருமண இணையதளங்களை உருவாக்க மறுத்த வரைகலை வடிவமைப்பாளர் (கிராஃபிக் டிசைனர்) ஒருவருக்கு ஆதரவாக அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கொலராடோவைச் சேர்ந்த லோரி ஸ்மித், தனது கிறிஸ்தவ நம்பிக்கையின் காரணமாக ஒரே பாலின ஜோடிகளுக்குச் சேவை செய்ய முடியாது என்று வாதிட்டார்.
கொலராடோ மாநில சட்டம் பாலியல் நோக்குநிலை காரணமாக பொது மறுக்கும் சேவைக்கு வணிகங்களைத் தடை செய்கிறது. ஆனால், கலைஞர்கள் தங்கள் மத நம்பிக்கைகளுக்கு எதிரான செய்திகளை வெளிப்படுத்தக் கட்டாயப்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் இப்போது கூறியுள்ளது.
ஐக்கிய மாகாணங்களின் உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமையன்று நடந்த முக்கிய வழக்கு, சுதந்திரமான பேச்சு உரிமைகளுக்கு எதிராக பாகுபாடு இல்லாமல் பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெறுவதற்கு தன் பாலின மக்களின் உரிமைகளை முன்வைத்தது.
ஆறு பழமைவாத நீதிபதிகளும் வடிவமைப்பாளரின் பக்கம் இருந்தனர். அதே நேரத்தில் நீதிமன்றத்தின் மூன்று தாராளவாதிகள் கருத்து வேறுபாடு தெரிவித்தனர்.
நீதிமன்றத்தின் பெரும்பான்மையான கருத்து என்னவென்றால், சுதந்திரமான பேச்சுரிமையைப் பாதுகாக்கும் முதல் திருத்தம், கொலராடோவை வடிவமைப்பாளரை அவர் உடன்படாத ஒப்புதல் செய்திகளை உருவாக்க கட்டாயப்படுத்துவதைத் தடுக்கிறது.
பெரும்பான்மையான கருத்தை வழங்கிய நீதிபதி நீல் கோர்சுச் எழுதினார்: "முதல் திருத்தம் அமெரிக்காவை பணக்கார மற்றும் சிக்கலான இடமாக கருதுகிறது. அங்கு அனைத்து மனிதர்களும் சுதந்திரமாக சிந்திக்கவும் பேசவும் முடியும், அரசாங்கம் கோருவது போல் அல்ல."
ஆனால் மூன்று மாறுபட்ட நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி சோனியா சோடோமேயர் கூறினார்: "இன்று, நீதிமன்றம், அதன் வரலாற்றில் முதல் முறையாக, பாதுகாக்கப்பட்ட வகுப்பினருக்கு சேவை செய்ய மறுக்கும் அரசியலமைப்பு உரிமையை பொதுமக்களுக்கு திறந்திருக்கும் ஒரு வணிகத்தை வழங்குகிறது."
அவர் மேலும் கூறியதாவது: "அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்திலும், தன்பாலின மக்களின் வாழ்விலும் இன்று ஒரு சோகமான நாள்."
ஜனாதிபதி ஜோ பிடன் இந்த தீர்ப்பை விமர்சித்தார். மேலும் இது நீண்டகால சட்டங்களை வலுவிழக்கச் செய்து மேலும் பாகுபாடுகளை ஏற்படுத்தும் என்று அஞ்சுவதாகக் கூறினார்.
"அமெரிக்காவில், எந்தவொருவரும் அவர்கள் யார் அல்லது யாரை நேசிக்கிறார்கள் என்பதற்காக எந்தப் பாகுபாட்டையும் எதிர்கொள்ளக்கூடாது" என்று திரு பிடன் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.