சிறிலங்காவில் தற்போதைய வெளிப்படையான ஆட்சி காரணமாக சீனா அதிகளவிலான முதலீடுகளை எதிர்பார்க்கிறது: சீன அமைச்சர்
ஜனாதிபதி திசாநாயக்கவின் நிர்வாகத்தால் பின்பற்றப்படும் தெளிவான கொள்கை வழிகாட்டலுடன், நாட்டில் முதலீடு செய்ய விரும்பும் சீன முதலீட்டாளர்களிடமிருந்து ஆர்வம் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் வாங் குறிப்பிட்டார்.

சிறிலங்காவுக்கு அலுவல்பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள சீன மக்கள் குடியரசின் வர்த்தக அமைச்சர் வங் வென்டாவோ வியாழனன்று (29) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
சிறிலங்காவின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, ஜனாதிபதி திசாநாயக்கவின் நிர்வாகத்தால் பின்பற்றப்படும் தெளிவான கொள்கை வழிகாட்டலுடன், நாட்டில் முதலீடு செய்ய விரும்பும் சீன முதலீட்டாளர்களிடமிருந்து ஆர்வம் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் வாங் குறிப்பிட்டார்.
100 இற்கும் மேற்பட்ட சீன முதலீட்டாளர்களின் பங்குபற்றுதலுடன் மேற்கொள்ளப்பட்ட இந்தப் பயணம் இரு நாடுகளுக்குமிடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான உறுதியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.