Breaking News
சிறிலங்காவுடன் அடுத்த திட்ட மறுஆய்வில் விரைவில் உடன்பட பன்னாட்டு நாணய நிதியம் நம்பிக்கை
சிறிலங்காவுடனான திட்டம் குறிப்பிடத்தக்க அளவு பெரு நிலைத்தன்மைக்கு வழிவகுத்தது.

சிறிலங்காவுடன் அதன் திட்டத்தின் அடுத்த மறுஆய்வில் விரைவில் ஒரு உடன்பாட்டை பன்னாட்டு நாணய நிதியம் நம்புகிறது என்று உலகளாவிய கடன் வழங்குநரின் ஆசியா மற்றும் பசிபிக் துறையின் இயக்குனர் கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் கூறினார்.
"சிறிலங்காவுடனான திட்டம் குறிப்பிடத்தக்க அளவு பெரு நிலைத்தன்மைக்கு வழிவகுத்தது. இது அதிக வளர்ச்சி மற்றும் பணவீக்கத்தை மிதப்படுத்த வழிவகுத்தது," என்று வாஷிங்டனில் நடந்த பன்னாட்டு நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வசந்த கால கூட்டங்களின் போது ஒரு செய்தியாளர் கூட்டத்தில் ஸ்ரீனிவாசன் கூறினார்.
"தனியார் முதலீடு மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்கும் பரந்த கட்டமைப்பு சீர்திருத்தங்களை சிறிலங்கா மேற்கொள்ள வேண்டிய நேரம் இது" என்று ஸ்ரீனிவாசன் கூறினார்.