பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த சிறிலங்கா-ஆஸ்திரேலியா இருதரப்பு பேச்சுவார்த்தை
கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸும் கலந்துரையாடலில் இணைந்துகொண்டார்.

ஆஸ்திரேலியாவின் பிரதிப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ் தலைமையிலான அவுஸ்திரேலிய தூதுக்குழுவினர் சிறிலங்காவின் பிரதி பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) அவர்களை செவ்வாய்க்கிழமை (ஜூன் 03) கொழும்பிலுள்ள பிரதி அமைச்சரின் அலுவலகத்தில் இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.
கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸும் கலந்துரையாடலில் இணைந்துகொண்டார். அரசியல், பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை உள்ளடக்கிய ஆஸ்திரேலியாவிற்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.
தற்போதுள்ள கூட்டாண்மைகளை விரிவுபடுத்துதல், பிராந்திய பாதுகாப்பை வளர்த்தல், கடல்சார் பாதுகாப்பு, கடல்சார் விழிப்புணர்வு, திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி போன்ற துறைகளில் ஒத்துழைப்புக்கான புதிய வழிகளை கண்டறிதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளில் இரு தரப்பினரும் ஈடுபட்டனர்.