தமிழ்த் தலைவர்கள் குழுவுடன் மோடி சந்திப்பு
தனது பயணத்தின் போது தொடங்கப்பட்ட பல திட்டங்கள் மற்றும் முயற்சிகள் அவர்களின் சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் என்றும் உறுதியளித்ததாகவும் மோடி கூறினார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிறிலங்காவுக்கு மேற்கொண்டுள்ள பயணத்தின் போது தமிழ் அரசியல் கட்சி பிரதிநிதிகள் குழுவொன்றை கொழும்பில் சந்தித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா ஆகியோரின் மறைவுக்கு அவர் தனது அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.
ஒன்றுபட்ட சிறிலங்காவுக்குள் தமிழ்ச் சமூகமானது சமத்துவம், கண்ணியம் மற்றும் நீதியுடன் வாழ்வதற்கான இந்தியாவின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியதாகவும், தனது பயணத்தின் போது தொடங்கப்பட்ட பல திட்டங்கள் மற்றும் முயற்சிகள் அவர்களின் சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் என்றும் உறுதியளித்ததாகவும் மோடி கூறினார்.
"சிறிலங்காத் தமிழ் சமூகத்தின் தலைவர்களை சந்திப்பது எப்போதும் மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு தனிப்பட்ட முறையில் அறிமுகமான மதிப்பிற்குரிய தமிழ் தலைவர்களான இரா.சம்பந்தன், திரு மாவை சேனாதிராஜா ஆகியோரின் மறைவுக்கு எனது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் சமூகத்திற்கு சமத்துவம், கண்ணியம் மற்றும் நீதியுடன் வாழ்வதற்கான அசைக்க முடியாத உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினேன். எனது பயணத்தின் போது தொடங்கப்பட்ட பல திட்டங்கள் மற்றும் முயற்சிகள் அவர்களின் சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார முன்னேற்றத்திற்கு பங்களிக்கும்" என்று மோடி 'எக்ஸ்' (முன்பு ட்விட்டர்) தளத்தில் பதிவிட்டுள்ளார்.