சிறிலங்காவில் இணையவழி இரயில் பயணச்சீட்டு விநியோகம் ஆரம்பம்
இணையவழி ரயில் பயணச்சீட்டு வழங்கும் நடவடிக்கை வியாழன் (22) முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் ரஞ்சித் ரூபசிங்க தெரிவித்தார்.

ரயில் பயணிகள் டிக்கெட் வாங்க அரசாங்கம் ஒரு இணையவழித் தளத்தை (www.pravesha.lk) அறிமுகப்படுத்தியுள்ளது. இப்போது குறுகிய தூரம் பயணம் செய்யும் பயணிகள் தங்கள் அலைபேசிகளைப் பயன்படுத்திப் பயணச் சீட்டு வாங்க இந்தப் புதிய முறை அனுமதிக்கிறது.
இணையவழி ரயில் பயணச்சீட்டு வழங்கும் நடவடிக்கை வியாழன் (22) முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் ரஞ்சித் ரூபசிங்க தெரிவித்தார்.
"பயணிகள் இப்போது இணையதளம் மூலம் டிஜிட்டல் ரயில் பயணச் சீட்டு களை வாங்கலாம். இணையத்தளம் (www.pravesha.lk) மூலம் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியத்தை நீக்குகிறது. நேரில் வாங்க விரும்புவோருக்குப் பயணச் சீட்டுகள் விற்பனை நிலையங்களில் (கவுண்டர்) கிடைக்கும்" என்றார்.
"இந்த ஆண்டு இறுதிக்குள் பருவக் காலப் பயணச் சீட்டுகளுக்கான (சீசன் டிக்கெட்டு) இந்த இணையவழி முறையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். கூடுதலாக, ரயில் இருக்கை முன்பதிவு மற்றும் சரக்கு போக்குவரத்துக்கான புதிய முறைகள் அடுத்த மூன்று மாதங்களில் வெளியிடப்படும், "என்று அவர் கூறினார்.