மாலினி பொன்சேகாவின் அரச இறுதிச் சடங்குகள் ஏற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடல்
ருமதி மாலினி பொன்சேகாவின் பூதவுடல் ஞாயிற்றுக்கிழமை (25) அன்று தேசியத் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தரங்கனி மண்டபத்தில் வைக்கப்படவுள்ளது.

மறைந்த முன்னணி நடிகையும் இலங்கை சினிமாவின் அடையாளமுமான மாலினி பொன்சேகாவின் இறுதிச் சடங்குகள் அரச மரியாதையுடன் திங்கட்கிழமை (26) சுதந்திர சதுக்க வளாகத்தில் இடம்பெறவுள்ளன.
அன்னாரின் அரச இறுதிக்கிரியைக்கான ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி எச்.எம்.சுனில் செனவி மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாரநாயக்க ஆகியோரின் தலைமையில் சனிக்கிழமை (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்போதே உத்தியோகபூர்வ ஏற்பாடுகள் உறுதிப்படுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
திருமதி மாலினி பொன்சேகாவின் பூதவுடல் ஞாயிற்றுக்கிழமை (25) அன்று தேசியத் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தரங்கனி மண்டபத்தில் வைக்கப்படவுள்ளது.
அன்னாரின் இறுதிச் சடங்குகள் எதிர்வரும் திங்கட்கிழமை (26) மாலை சுதந்திர சதுக்கத்தில் பூரண அரச மரியாதையுடன் இடம்பெறவுள்ளது. மாலினி பொன்சேகாவின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் வருகை தரும் பொதுமக்களுக்கு தேவையான ஏற்பாடுகள் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.