Breaking News
ஜம்மு காஷ்மீரின் குப்வாராவில் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் குண்டு வீச்சு
நள்ளிரவுக்குப் பிறகு கர்னா பகுதியில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளைக் குறிவைத்துப் பாகிஸ்தான் படையினர் குண்டு மற்றும் மோட்டார் குண்டுகளை வீசியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆபரேஷன் சிந்தூரின் ஒரு பகுதியாக அண்டை நாட்டில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்புகளை இந்திய ஆயுதப்படைகள் குறிவைத்த ஒரு நாள் கழித்து, ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தான் படைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வியாழக்கிழமை எல்லை தாண்டிய குண்டு வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டன.
நள்ளிரவுக்குப் பிறகு கர்னா பகுதியில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளைக் குறிவைத்துப் பாகிஸ்தான் படையினர் குண்டு மற்றும் மோட்டார் குண்டுகளை வீசியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு இந்திய ராணுவம் திறம்படப் பதிலடி கொடுத்தது. இந்தத் தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை.