ஜனாதிபதி அனுரகுமார ஜெர்மனி பயணம்
ஜெர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் (DIHK) ஏற்பாடு செய்துள்ள வர்த்தக மன்றத்திற்கும் ஜனாதிபதி திசாநாயக்க தலைமை தாங்குவார்.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க 2025 ஜூன் 11 முதல் 13 ஆம் திகதி வரை மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜெர்மனிக்குப் பயணம் செய்துள்ளார்.
ஜெர்மன் ஜனாதிபதி பிராங்க்-வோல்டர் ஸ்ரைன்மியரின் அழைப்பின் பேரில் இந்த பயணம் மேற்கொள்ளப்படுவதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
ஜனாதிபதி திசாநாயக்க தனது பயணத்தின் போது, ஜனாதிபதி ஸ்ரைன்மையர், ஜெர்மன் கூட்டாட்சி அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் பிற பிரமுகர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடுவார். வர்த்தகம், டிஜிட்டல் பொருளாதாரம், முதலீடு மற்றும் தொழில் பயிற்சி வாய்ப்புகள் உள்ளிட்ட அரசாங்கத்தின் முன்னுரிமைகளுக்கு ஏற்ப ஒத்துழைப்புக்கான புதிய வழிகளை ஆராய்வதில் இந்தப் பேச்சுவார்த்தைகள் கவனம் செலுத்தும்.
இதற்கு மேலதிகமாக, ஜெர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் (DIHK) ஏற்பாடு செய்துள்ள வர்த்தக மன்றத்திற்கும் ஜனாதிபதி திசாநாயக்க தலைமை தாங்குவார். சிறிலங்காவின் தற்போதைய பொருளாதார மாற்றத்தை வெளிப்படுத்துவதற்கும், முதலீட்டு வாய்ப்புகளை முன்னிலைப்படுத்துவதற்கும், நாட்டின் வளர்ச்சி திறனைப் பற்றி கலந்துரையாடுவதற்கும், சிறிலங்காவுக்கும் ஜெர்மனிக்கும் இடையிலான புதிய வர்த்தக உறவுகளை வளர்ப்பதற்கும் இந்த மன்றம் ஒரு தளத்தை வழங்கும்.
இந்த பயணத்தின் போது ஜெர்மனியின் சுற்றுலா மற்றும் பயண கைத்தொழில் சங்கங்களின் பிரதிநிதிகளையும் ஜனாதிபதி சந்திக்கவுள்ளார்.