சீனாவின் ஜாஜியன் மாகாண ஆளுநருடன் ரில்வின் சில்வா சந்திப்பு
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பின்படி, மக்கள் விடுதலை முன்னணியின் தலைமைச் செயலாளர் டில்வின் சில்வா இந்த விஜயத்தில் ஈடுபட்டுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வாவிற்கும், சீனாவின் ஜாஜியன் மாகாண ஆளுநரான சகோதரர் லியு ஜியாவின் சகோதரருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று முன்தினம் (09) ஜாஜியன் மாகாண பிரதான பொதுமக்களின் வேலைவாய்ப்பு மண்டபத்தில் நடைபெற்றது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பின்படி, மக்கள் விடுதலை முன்னணியின் தலைமைச் செயலாளர் டில்வின் சில்வா இந்த விஜயத்தில் ஈடுபட்டுள்ளார்.
இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்த சீனா மற்றும் ஜாஜியன் மாகாணத்தின் முன்னோக்கிய பங்களிப்பு குறித்தும் இங்கு மேலும் கலந்துரையாடப்பட்டது. இலங்கையில் ஊழல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து மக்கள் விடுதலை முன்னணியின் முன்முயற்சியுடன் நிறுவப்பட்ட தேசிய மக்கள் படை அரசாங்கம்இ நாட்டின் வளர்ச்சியை விரைவுபடுத்தும் திட்டத்துடன் நகர்ந்து வருவதாகவும், மக்கள் விடுதலை முன்னணியின் தலைமைச் செயலாளர் டில்வின் சில்வா இங்கு வலியுறுத்தினார். சீனாவிற்கான தற்போதைய பயணத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அனுபவம் , சீனா மற்றும் ஜாஜியன் மாகாணத்தின் ஆதரவு எதிர்பார்க்கப்படுவதாகவும் எனவும் ரில்வில் சில்வா இங்கு வலியுறுத்தினார்.
இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, பிரதி அமைச்சர் முனீர் முலபர், யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற அமைச்சர் ஏ. ஜெகதீஸ்வரன், மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தர்மபிரியா விஜேசிங்க, ஜாஜியன் மாகாண துணை ஆளுநர் லு ஷான், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேசப் பிரிவின் தெற்காசிய பிராந்திய கண்காணிப்பாளர் ஜெனரல் பான் சியு பின் மற்றும் ஜாஜியன் மாகாணம் பிரதிநிதிகளும்,. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகளும் கலந்துக்கொண்டனர்.