பன்னாட்டு நாணய நிதியத்தின் உயர்மட்ட குழு இன்று இலங்கை வருகை
விஜித ஹேரத், நாட்டின் விரிவாக்கப்பட்ட நிதி அபிவிருத்தி திட்டம் தொடர்பான ஆரம்ப கலந்துரையாடல்கள் மட்டுமே இந்த சந்திப்பின் போது இடம்பெறும் என்று தெரிவித்தார்
பன்னாட்டு நாணய நிதியத்தின் உயர்மட்டக் குழுவொன்று இன்று (2) நாட்டிற்கு வருகை தரவுள்ளது.
அதன்படி, ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா சீனிவாசன் தலைமையிலான குழுவினர் அக்டோபர் 02 முதல் 04 வரை கொழும்புக்கு வருகை தந்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சிறிலங்காவின் புதிய பொருளாதார குழுவினரை சந்திக்கவுள்ளனர்.
பன்னாட்டு நாணய நிதியத்தின் ஆதரவுடன் இலங்கையின் பொருளாதார வேலைத்திட்டத்தின் கீழ் அண்மைய பொருளாதார அபிவிருத்திகள் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக இந்த உயர்மட்ட தூதுக்குழு சிறிலங்காவுக்கு விஜயம் செய்துள்ளதாக பன்னாட்டு கடன் வழங்குநரின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இந்த வாரம் சிறிலங்காவுக்கு விஜயம் செய்துள்ள பன்னாட்டு நாணய நிதியத்தின் உயர்மட்ட தூதுக்குழுவின் வருகை தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத், நாட்டின் விரிவாக்கப்பட்ட நிதி அபிவிருத்தி திட்டம் தொடர்பான ஆரம்ப கலந்துரையாடல்கள் மட்டுமே இந்த சந்திப்பின் போது இடம்பெறும் என்று தெரிவித்தார்
அதன் கட்டமைப்பு உண்மைகள் தொடர்பான மேலதிக கலந்துரையாடல் அக்டோபர் மாத இறுதியில் நியூயோர்க்கில் இடம்பெறவுள்ளதாக அவர் நேற்று (01) கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.