Breaking News
பாதுகாப்பு படைகளின் பிரதானியாக சவேந்திர சில்வா மீண்டும் நியமனம்
ஜெனரல் சில்வாவின் புதிய பதவிக்காலம் ஜூன் 1, 2024 முதல் டிசம்பர் 31, 2024 வரை நீடிக்கிறது.
![](https://tamil.voiceforjustice.ca/uploads/savendra-silva.jpg)
பாதுகாப்பு படைகளின் பிரதானியாக ஜெனரல் சவேந்திர சில்வாவை டிசம்பர் 31 வரையான காலத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் நியமித்துள்ளார் .
2009 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க பாதுகாப்பு பதவி நிலை பிரதானி சட்டத்தின் 3 வது பிரிவின் கீழ் ஜெனரல் சில்வாவின் பதவிக்காலத்தை சி.டி.எஸ் ஆக நீடிக்கும் ஒரு அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
ஜெனரல் சில்வாவின் புதிய பதவிக்காலம் ஜூன் 1, 2024 முதல் டிசம்பர் 31, 2024 வரை நீடிக்கிறது.
அவர் முதன்முதலில் ஜூன் 1, 2022 அன்று பாதுகாப்புப் பணியாளர்களின் தலைவராக நியமிக்கப்பட்டார்.